வழக்கம் போல் திருவிழா முடிந்தவுடன் நேற்று மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த சங்கர், கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது நான்கு சவரன் நகை 1.5 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.