அகமதாபாத் : குஜராத்திகள் குறித்த சர்ச்சை பேச்சு; இன்று குஜராத் நீதிமன்றத்தில் ஆஜராகும் தேஜஸ்வி யாதவ். செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராகும்படி அகமதாபாத் நீதிமன்றம் தேஜஸ்விக்கு சம்மன் அனுப்பியது. குஜராத்திகள் மூர்த்தக்கத்தனமானவர்கள் என தேஜஸ்வி பேசியதாக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக அகமதாபாத் மெட்ரோபாலிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.