நீட் முறைகேடு – குஜராத் பள்ளி உரிமையாளர் கைது

காந்திநகர்: நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு தொடர்பாக குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கோத்ரா அருகே ஜெய் ஜலராம் பள்ளியில் மே 5-ல் நடந்த நீட் தேர்வில் முறைகேடு நடந்தது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை குஜராத் போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்; 6-வதாக தீக்சித் படேல் கைது செய்யப்பட்டுள்ளார். நீட் தேர்வில் தேர்ச்சி அடையச் செய்ய 27 மாணவர்களிடம் தலா ரூ.10 லட்சம் கேட்டதாக பள்ளி உரிமையாளர் தீக்சித் மீது புகார் எழுந்தது. நீட்-ல் அதிக மதிப்பெண் பெற ஜெய் ஜலராம் பள்ளியை தேர்வு மையமாக தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!