அகமதாபாத்: குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததில் மின்னல் தாக்கி இதுவரை 27 பேர் உயிரிழந்திருப்பதாக மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் தகோத் மாவட்டத்தில் 4 பேர், பாரூச்சில் 3, தாபியில் 2, அகமதாபாத், அம்ரேலி, பனஸ்கந்தா, போடாட், கெடா, மெஹ்சனா, பஞ்ச்மகால், சபர்கந்தா, சூரத், சுரேந்தர் நகர் மற்றும் துவரகா மாவட்டங்களில் தலா ஒருவர் உட்பட 27 பேர் இடி, மின்னல் தாக்கியதில் பலியாகி உள்ளனர். இவர்களது இறப்புக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது டிவிட்டர் பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.