ராஜ்கோட்: குஜராத் மாநிலம்,ராஜ்கோட்டில் உள்ள டிஆர்பி கேம் ஸோன் என்ற விளையாட்டு மையத்தில் கடந்த மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில்,4 சிறுவர்கள் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் கருகி பலியானவர்களின் உறவினர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று காணொலி மூலம் கலந்துரையாடினார். அவர்களுடன் அரைமணி நேரம் கலந்துரையாடினார். தீ விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி அவர்களின் குடும்பத்தினருடன் கட்சி எப்போதும் இருக்கும் என்றார். அப்போது மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில்,கட்சி எம்எல்ஏக்கள் ஜிக்னேஸ் மேவானி,லால்ஜி தேசாய் ஆகியோர் உடனிருந்தனர்.