சூரத்: குஜராத் மாநிலம் வடோதராவில் விஸ்வாமித்ரி நதிக்கரையில் உள்ள குடியிருப்புக்குள் முதலை புகுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முதலையை ஒரு மணி நேரம் போராடி பிடித்தனர். விஸ்வாமித்ரி நதியில் 300க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக தீயணைப்புத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.