பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்ககோரி காங்கிரஸ் கட்சி சார்பில் 14 நாட்கள் நியாய யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் அமித் சாவ்தா, சேவா தளத்தின் தலைவர் லால்ஜி தேசாய், எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் நியாய யாத்திரை பிரசாரத்தை தொடங்கி வைத்தனர். இந்த யாத்திரை 350கிலோமீட்டர் நடைபெறும். வருகிற 23ம் தேதி காந்தி நகரில் நிறைவடைகிறது.