தற்போது எம்எல்ஏவாக இருக்கும் கெனிபென் தாக்குர் நேற்று பேரவை சபாநாயகர் சங்கர் சவுத்ரியை சந்தித்து எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதம் கொடுத்தார். கெனிபென் தாக்குர் வாவ் தொகுதியில் இருந்து 2 முறை எம்எல்ஏவாக தேர்வானார். 2017ம் ஆண்டு வாவ் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்ட சங்கர் சவுத்ரியை அவர் தோற்கடித்தார். அவரது ராஜினாமாவால் பேரவையில் காங்கிரசின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. பாஜவின் பலம் 161 ஆக உள்ளது. ஆம் ஆத்மிக்கு 4 பேர், சமாஜ்வாடி 1, சுயேச்சைகள் 2 பேர் உள்ளனர்.