இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில்,நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் யாராவது மீறுவது தெரிந்தால் அவர்களை சிறைக்கு அனுப்புவதோடு இடிக்கப்பட்ட கட்டிடத்தை மீண்டும் கட்டி கொடுக்க உத்தரவிடப்படும் என்று எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வரும் 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.