சூரத்: குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சிக்கி 15 பேர் காயமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த கட்டடத்துக்குள் ஏராளமானோர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுககளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தீவிரமான ஈடுபட்டுள்ளனர்.