குஜராத்தில் விடாது பெய்யும் கனமழை: 7 பேர் பலி

அகமதாபாத்: குஜராத்தில் கடந்த சில தினங்களாக இயல்புக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் மழையால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் சிக்கி இதுவரை 7 பேர் உயிரிழந்து விட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் வௌியிட்ட அறிக்கையில், “நேற்று முன்தினம் திங்கள்கிழமை மழை தொடர்பான விபத்துகளால் 7 பேர் பலியாகி விட்டனர். காந்தி நகர், கெடா, வதோதரா மாவட்டங்களில் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். ஆனந்த் மாவட்டத்தில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவரும், 2 பேர் வௌ்ள நீரில் மூழ்கியும் உயிரிழந்தனர். காந்திநகர், பஞ்சமஹால், நவ்சாரி, வல்சாத், வதோதரா, பரூச், கெடா, பொடாட் மற்றும் ஆரவல்லி ஆகிய மாவட்டங்களில் ஆறுகள் மற்றும் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வௌ்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கயைாக 6 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ” என தெரிவித்துள்ளர்.

மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வௌியிட்டுள்ள அறிக்கையில், “
மோர்பி மாவட்டம் தங்கரா தாலுக்காவில் நேற்று காலை 6 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரத்தில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 347 மிமீ மழை பெய்துள்ளது ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு