குஜராத்: குஜராத் மாநிலம் கோத்ராவில் ஏற்கனவே பல முறை நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. கோத்ராவில் நீட் தேர்வு மையமாக இருந்த ஜெய் ஜெலராம் பள்ளியின் முதல்வர் மகாவீர் பிரசாத் சர்மா நீட் முறைகேடு வழக்கில் கைது செய்தனர். தேர்வு முடிந்ததும் மாணவர்கள் வினாத்தாளில் நிரப்பாமல் விட்டுச் சென்ற கேள்விகளுக்கு பதில் எழுதி மோசடி செய்த புகாரில் சர்மா கைது செய்யப்பட்டுள்ளார்