அகமதாபாத்: ஆம் ஆத்மி குஜராத் பிரிவு துணைத்தலைவர் அர்ஜுன் ரத்வா கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுப்பதில் கட்சியின் தேசிய தலைமை தன்னை போன்ற உள்ளூர் தலைவர்களை கலந்தாலோசனை செய்வதில்லை. இதனால் தான் சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் தோல்வி அடைந்தோம். அதனால் கனத்த இதயத்துடன் பதவி விலகி உள்ளேன்” இவ்வாறு அவர் கூறினார்.