அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் வழிகாட்டும் நெறிமுறைகள்

2024-2025 ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கத்தைச் செயல்படுத்திட 4 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு TNTP தரும் பயிற்சியில் பங்கேற்க வைத்தல் வேண்டும். வாசிப்பு இயக்கப் புத்தகங்கள் அரசுப்பள்ளிகளுக்குச் சென்று சேர்ந்ததை உறுதி செய்தல் வேண்டும்.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 53 புத்தகங்கள் தற்போது வழங்கியுள்ள 71 புத்தகங்கள் EMIS தளத்தில் பதிவேற்றுதல், வாசிப்பு இயக்கப் புத்தகங்களை பயன்படுத்துதல், நூலகப் பாடவேளையில் உரிய வழிகாட்டுதல்களை வழங்குதல், மாணவர்கள் எந்த வாசிப்புநிலையில் உள்ளனர் (நட, ஓடு, பற) என்ற விவரத்தை EMIS தளத்தில் உள்ளீடு செய்தல் உள்ளிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளை மாநிலத் திட்ட இயக்ககம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு