சென்னை: சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே 2 ரவுடிகள் என்கவுண்டர் செய்யப்பட்டனர். கூடுவாஞ்சேரி காவல் எல்லை காரணை புதுச்சேரி பகுதியில் ரவுடிகள் வினோத் என்ற சோட்டா வினோத், ரமேஷ் காரில் வந்துள்ளனர். வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளரை ரவுடிகள் வினோத், ரமேஷ் ஆகியோர் கத்தியால் வெட்டியுள்ளனர். ரவுடிகள் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் வெட்டியதால், காவல் ஆய்வாளர் முருகேசன் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காவல் ஆய்வாளர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் ரவுடிகள் வினோத், ரமேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.