சென்னையில் ஒரு வாரத்தில் குட்கா விற்ற 30 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் புகையிலை பொருட்கள், வெளிநாட்டு சிகரெட்டுகளை விற்ற 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை பொருட்களை கடத்துதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 30 பேரிடம் இருந்து 494 கிலோ புகையிலை பொருட்கள், 9.2 கிலோ மாவா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்திய 3 ஆட்டோக்களை போலீஸ் பறிமுதல் செய்தது.

 

Related posts

புதுக்கோட்டையில் தெருநாய் கடித்து சிறுவர் சிறுமிகள் காயம்

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்