சூறாவளி காற்றால் அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமானது. அதேபோல் தேக்கு, தென்னை, புளியமரங்களும் சாய்ந்தது. மின்கம்பங்கள் உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள், சம்பவ இடங்களுக்கு சென்று மின்கம்பங்களை சீரமைத்து மின் இணைப்பு வழங்கினர்.சூறாவளி காற்றால் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.