வேலூர்: குடியாத்தம் அருகே அகரம்சேரி-மேல்ஆலத்தூர் இடையே அனுமதியின்றி மண் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மண் பாலம் தொடர்பாக மேல்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். மழை வெள்ளத்தில் மண்பாலத்தின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்ட நிலையில் எஞ்சிய பகுதி இடையூறாக உள்ளது. ஆற்றில் நீர் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மண் பாலத்தின் எஞ்சிய பகுதியை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.