கனகம்மாசத்திரம் அடுத்த அருங்குளம் கூட்டு சாலை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து நிலை தடுமாறி ராஜ்குமார் கீழே விழுந்துள்ளார். இதில் அவருடைய கால் எலும்பு முறிந்தது. அப்போது அவ்வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து கனகம்மாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.