சென்னை: நிலுவை ஜிஎஸ்டியை தனக்கு செலுத்த லைகா நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவை ஜிஎஸ்டி தொகையான ரூ.5.24 கோடியை வழங்க லைகா நிறுவனத்துக்கு உத்தரவிடக் கோரி விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். விஷால் வழக்கை மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு அனுப்ப உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.