இதற்காக விசைத்தறி உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியின் கூடுதல் தொகையை ஒன்றிய அரசு இதுவரை திரும்ப தரவில்லை என்பது இவர்களது கடுமையான குற்றச்சாட்டு. இதனால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியின் கூடுதல் தொகையை ஒன்றிய அரசு திரும்ப தராததால் ஈரோட்டில் சுமார் 500 விசைத்தறியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறி விட்டதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 20 தறிகள் வரை வைத்து சொந்தமாக ஜவுளி உற்பத்தி செய்து வந்த பலரும் ஆர்டர் எடுத்து கூலிக்கு நெசவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.