இத்தேர்வு எழுத 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் (78 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர். 4 லட்சத்து 48 ஆயிரத்து 90 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால், ஒரு பணியிடத்துக்கு 254 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவானது. திருவிழா போல நடந்த தேர்வுக்கான ரிசல்ட் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வு எழுதியவர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு எப்போது வெளியாகும் என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் தளம் பதிவில், “ ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும்” என்று அறிவித்துள்ளது.