முதல்நிலை தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு அதே ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி நடந்தது. மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 518 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த நிலையில் முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் கடந்த ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 2 ஆயிரத்து 162 பேர் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ம் தேதி வரை மெயின் தேர்வு நடந்தது. இத்தேர்வை 2,113 பேர் எழுதினர். இதில் ஆண்கள் 1333 பேர், பெண்கள் 780 பேர், அடங்குவர்.
இந்த நிலையில் குரூப் 1 மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.in வெளியிட்டுள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்காணல் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெற உள்ளது.