சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இது தேர்வர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.
திமுக அரசு உடனடியாக டிஎன்பிஎஸ்சி அமைப்பிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, நிலுவையில் உள்ள தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட்டு, தேர்வானவர்களுக்கான பணி ஆணைகளை வழங்க வேண்டும். மேலும், காலி அரசு பணியிடங்களை நிரப்ப, முறையான தேர்வு கால அட்டவணைகளை வெளியிட்டு, அதனை சீரான முறையில் பின்பற்றி உடனடியாக தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.