இந்நிலையில், நேற்று அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளர் நாகரத்தினம்மா(44), முனிராஜ்(51), முரளி(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 சிறுவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளரான ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்த நாகரத்தினம்மாவிற்கு சொந்தமான வீட்டில் சசிகுமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்ததார். அவரை காலி செய்யுமாறு நாகரத்தினம்மா கூறியுள்ளார். அதன்படி, வீட்டை காலி செய்தபோது முன்பணத்தில் 1500 ரூபாயை நாகரத்தினம்மா பிடித்தம் செய்துள்ளார்.
இதுகுறித்து சசிக்குமார் பலமுறை நாகரத்தினமாவிடம் நேரிலும், போன் செய்தும் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் நாகரத்தினம்மாவை சசிக்குமார் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வழக்கு பதிவு செய்தனர். ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக திம்மராஜ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் நாகரத்தினம்மாவிற்கு எதிராக சாட்சி கூறியதாக தெரிகிறது. இந்த ஆத்திரத்தில் திம்மராஜை தீர்த்து கட்டியதாக தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.