தஞ்சை: மளிகைக் கடையில் குட்கா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். குட்காவை பதுக்கி விற்பனை செய்த கடை உரிமையாளர் முரளி, சரவணன், முத்து ஆகியோர் கைதாகினர். மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த 250 கிலோ குட்காவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.