திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி: சமத்துவம்-சமூகநீதி- சுயமரியாதை பயணத்தில் கல்வியால் சமூகத்தை உயர்த்தும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. கற்றுக்கொள்-பகுத்தறி-கேள்வி கேள் என்று வகுப்பறை கற்றுத்தந்த பாடமே நவீன உலகின் திறவுகோல். அதை அன்றாடம் சாத்தியப்படுத்தி வரும் ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: ஒவ்வொரு தனிமனிதனையும் செதுக்குகின்றவர்களாக ஆசிரியர்கள் திகழ்ந்து வருகிறார்கள். இந்த அற்புதமான ஆசிரியர் தின நன்னாளில், பள்ளிக் காலம் முதல் இன்றைய நாள் வரை, எனக்கு வழிகாட்டிகளாக இருந்த மற்றும் இருந்து வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். இதுபோல, மமக தலைவர் ஜவாஹிருல்லா, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.