ஆசிரியர் தினத்தை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: ஆசிரியர் தினத்தை ஒட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: எல்லையற்றக் கல்வியை இல்லையென்று கூறாது எல்லோருக்கும் கொண்டு சேர்க்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கு ‘ஆசிரியர் தின’ வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம். ‘இந்திய ஒன்றியத்தில் மட்டுமல்ல, உலக அளவிலும் தமிழ்நாட்டின் கல்விமுறையைச் சிறந்து விளங்கச் செய்து வரும் நம் ஆசிரியர்களின் அரும்பணியைப் போற்றுவோம். ஆசிரியர்கள் நலனுக்கு என்றும் துணை நிற்போம்.

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி: சமத்துவம்-சமூகநீதி- சுயமரியாதை பயணத்தில் கல்வியால் சமூகத்தை உயர்த்தும் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. கற்றுக்கொள்-பகுத்தறி-கேள்வி கேள் என்று வகுப்பறை கற்றுத்தந்த பாடமே நவீன உலகின் திறவுகோல். அதை அன்றாடம் சாத்தியப்படுத்தி வரும் ஆசிரியர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: ஒவ்வொரு தனிமனிதனையும் செதுக்குகின்றவர்களாக ஆசிரியர்கள் திகழ்ந்து வருகிறார்கள். இந்த அற்புதமான ஆசிரியர் தின நன்னாளில், பள்ளிக் காலம் முதல் இன்றைய நாள் வரை, எனக்கு வழிகாட்டிகளாக இருந்த மற்றும் இருந்து வருகின்ற ஆசிரியர்கள் மற்றும் குருமார்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். இதுபோல, மமக தலைவர் ஜவாஹிருல்லா, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்பட பலர் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Related posts

100 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

சிந்து சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்த ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது