* தமிழிசை சவுந்தரராஜன் (புதுச்சேரி ஆளுநர்): தேசிய தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கவும்- இந்திய அரசியலமைப்புச் சாசனம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகக் கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
* கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவதன் மூலமே இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். அத்தகைய சூழல் உருவாக குடியரசு நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.
* ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): ஒட்டு மொத்த இந்தியர்கள் அனைவரும் நம்நாட்டின் கலாச்சாரம், ஆன்மிகம், நல்லிணக்கம் ஆகியவற்றை மனதில் பதிய வைத்து நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும், வளமான மாநிலங்கள், வலிமையான பாரதம் உருவாகவும் ஒன்றிணைவோம், செயல்படுவோம், வெற்றிபெறுவோம்.
* பாரிவேந்தர் (ஐஜேகே நிறுவனர்): இந்தியா முன்னெடுக்கும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு துணை நின்று, உலக அரங்கில் இந்தியாவின் கம்பீரம் பட்டொளி வீசிப் பிரகாசிக்க, நாட்டின் 75வது குடியரசு தின நன்னாளில் உறுதியேற்போம்.
* சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்) : இனிய குடியரசு தினத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்களை தியாகம் செய்த உள்ளங்களுக்கு நன்றி செலுத்தி, இந்தியர் என்ற உணர்வுடன் சமத்துவ, சகோதரத்துவத்துவ எண்ணங்களுடன் தேசத்தை வல்லரசாக்க ஒன்றிணைவோம்.
* அதேபோல் ஜவாஹிருல்லா(மமக தலைவர்), நெல்லைமுபாரக்(எஸ்டிபிஐ கட்சி தலைவர்), சசிகலா, இந்திய ஹஜ் அஷோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கோகுல மக்கள் கட்சி நிறுவனர் எம்.வி.சேகர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.