சென்னை: உலக புத்தக தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் டிவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது: நல்ல புத்தகங்கள் நல்ல தோழன். ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது. நம்மை பண்படுத்துகிறது. அதனால் தான், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வதை ஓர் இயக்கமாகத் திமுகவினர் முன்னெடுக்கிறோம். புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், நமது திராவிட மாடல் அரசு மாவட்டங்கள் தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது. அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.