வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பொன்னுச்சாமி தாய் சுப்பம்மாள் மற்றும் மகன் நவீன்குமார் இருவரையும் காணாததால் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் தேடி உள்ளார். பின்னர், வீட்டின் முன்புறம் உள்ள 15 அடி ஆழமுள்ள நிலத்தடி தொட்டி மூடி திறந்திருந்ததால் சந்தேகம் அடைந்து தொட்டிக்குள் பார்த்த போது சுப்பம்மாள், நவீன் குமார் இருவரும் தொட்டியில் சடலமாக மிதந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், புஞ்சை புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டபோது போலியோ நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் பேரன் நவீன் குமார் சக்கர நாற்காலியில் நடமாடுவதை கண்டு மனவேதனையில் மூதாட்டி சுப்பம்மாள் இருந்ததாகவும், மன விரக்தியில் பேரனை தண்ணீர் தொட்டியில் தள்ளிவிட்டு விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.