போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், மூதாட்டி வள்ளியம்மாளின் வீட்டிற்கு அவரது கடைசி மகள் சின்னபொண்ணுவின் மகளை திருமணம் செய்த விக்னேஷ் (22) சென்று வந்தது தெரியவந்தது. இரவோடு இரவாக விக்னேசை போலீசார் மடக்கிப் பிடித்து, ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், மூதாட்டியை குடிபோதையில் பலாத்காரம் செய்து, வெட்டி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். உடனே அவரை போலீசார் கைது செய்தனர். கொலை குறித்து விக்னேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘மூதாட்டி வள்ளியம்மாளின் மகள் சின்னபொண்ணுவின் மகளை திருமணம் செய்த பேரன் விக்னேஷ், அடிக்கடி பாட்டி என்ற முறையில் அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில், ஆலச்சம்பாளையத்திற்கு வந்துள்ளார். அப்போது பாட்டி வள்ளியம்மாளின் வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் பாட்டி வள்ளியம்மாளை தவிர வேறு யாரும் அங்கு இல்லாததால், திடீரென போதையில் அவரை கீழே தள்ளி பலாத்காரம் செய்துள்ளார். மூதாட்டி வள்ளியம்மாள் கூச்சலிட்டு கத்தியுள்ளார். இதனால், நடந்த சம்பவத்ைத வெளியே சொல்லி அவமானப்படுத்தி விடுவார் என்பதால், அருகில் கிடந்த அரிவாளால் வெட்டி படுகொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்’ என்றனர்.