வீட்டில் பேன் சுவிட்ச் போட்டபோது மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் சாவு

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் வயலூர் ஊராட்சி நடுப்பட்டியைச் சேர்ந்த தேவராஜ்- ரேவதி தம்பதியின் மகன் திருக்குமரன் (15). 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள சுவிட்ச் போர்டில் பேன் பிளக்கை சொருகி திருக்குமரன் ஆன் செய்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அலறல் சத்தம் கேட்டு, வெளியே துணி காய வைத்துக் கொண்டிருந்த தாத்தா சீனிவாசன்(65) ஓடி வந்து பேரனை காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

உடனே ரேவதி வந்து இருவரையும் காப்பாற்ற முயன்ற போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்ட தேவராஜ் மெயின் சுவிட்சை ஆப் செய்ததும் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் ரேவதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மயங்கி கிடந்த தாத்தாவும், பேரனும் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

Related posts

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சிகள் நடைபெறவுள்ளது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் செயல்படக்கூடாது: அதிமுகவினருக்கு எடப்பாடி ரகசிய உத்தரவு

போதைப்பொருள் விற்பனை செய்வதில் தகராறு ஆட்டோவில் கடத்தி சென்று சரமாரி தாக்கி நண்பர்கள் 2 பேர் கழுத்து அறுத்து கொலை: 4 பேர் கும்பலுக்கு வலை