இதில் ஆங்கில பாட ஆசிரியருக்கான தேர்வில் 13 வினாக்களுக்கு என்ன பதிலை தேர்வு செய்திருந்தாலும் மதிப்பெண், 11 வினாக்களுக்கு ஏதாவது 3 பதில்களை தேர்வு செய்தால் மதிப்பெண் என உள்ளது. இவ்வாறு 24 வினாக்கள் தவறாக இருப்பதால் இதற்கு மதிப்பெண் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு ஏற்புடையதல்ல. எனவே, தற்போது வெளியிடப்பட்ட இறுதி விடை அடிப்படையில், பணி நியமன பட்டியல் வெளியிட தடை விதிக்க வேண்டும். வல்லுநர் குழுவை வைத்து ஆய்வு செய்து இறுதி விடை பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி மஞ்சுளா நேற்று விசாரித்து, இதில் இறுதி பணி நியமன பட்டியல் வெளியிட இடைக்கால தடை விதித்தும், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.