பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைப்பு

சென்னை: மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு பட்டதாரி மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் போட்டித் தேர்வு பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் வட்டார வளமைய ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுகள் 2024 ஜனவரி 7ம் தேதி நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக மேற்கண்ட தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மேற்கண்டபோட்டித் தேர்வு 2024 பிப்ரவரி 4ம் தேதி நடக்கும். இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த ஹால்டிக்கெட்டுகளை(7.1.2024க்கானது) பிப்ரவரி 4ம் தேதி நடக்கும் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Related posts

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பனியன் நிறுவனத்தில் தீ விபத்து

மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது