இந்நிலையில், தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக மேற்கண்ட தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மேற்கண்டபோட்டித் தேர்வு 2024 பிப்ரவரி 4ம் தேதி நடக்கும். இந்த தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தேர்வர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த ஹால்டிக்கெட்டுகளை(7.1.2024க்கானது) பிப்ரவரி 4ம் தேதி நடக்கும் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.