ஊத்து
இதுகுறித்து ‘‘தினகரன்” நாளிதழில் நேற்று (17ம் தேதி) படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர், நேற்று பள்ளிக்கு சென்று மர்ம நபர்கள் ஓட்டை போட்ட சுற்றுச்சுவரை பார்வையிட்டனர். மேலும் இதை உடனே சீரமைக்க வேண்டும் எனவும், வெளியாட்கள் யாரும் பள்ளியின் உள்ளே வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அப்போது பள்ளி மேலாண்மை குழுவினர், ஓரிரு நாட்களில் சுற்றுச்சுவரை சீரமைப்பதாக உறுதியளித்தனர். ஆய்வின்போது பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், துணை தலைமையாசிரியர் செந்தில் வேலன், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் உள்பட பலர் உடனிருந்தனர்.
* ஆசிரியர்கள் மீது புகார்
ஆய்வுக்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதியிடம் பள்ளி மேலாண்மை குழு சார்பில், ‘‘ஆசிரியர்கள் சரிவர பள்ளிக்கு வருவதில்லை, அப்படி வந்தாலும் வகுப்பிற்கு செல்வதில்லை’’ என புகார் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி தலைமையில், ஆசிரியர்களின் அவசர கூட்டம் நடந்தது. இதில் கல்வி அதிகாரி ஆசிரியர்களிடம் கூறும்போது, ‘‘ஆசிரியர்கள் அனைவரும் மாணவர்கள் ஒழுக்கமாக இருக்க அறிவுரை வழங்க வேண்டும், ஆசிரியர்கள் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரவேண்டும், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவர்கள் ஏன் வரவில்லை என்று வீட்டிற்கு சென்று விசாரிக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.