இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.சரவணன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் மகளுக்கு அரசு கல்லூரி எனக் குறிப்பிட்டு ஒரு தனியார் பல் மருத்துவக்கல்லூரியில் இடம் வழங்கப்பட்டு, அதற்கான கற்பித்தல் கட்டணமாக ரூ.9,600 வசூலித்துள்ளனர். ஆனால் மனுதாரர் கல்லூரியில் சேர்ந்த பின்பு அது சுயநிதி கல்லூரி எனக் குறிப்பிட்டு, ரூ.3.70 லட்சம் கல்வி கட்டணமும், ரூ.75 ஆயிரம் விடுதி கட்டணமும் கேட்டுள்ளனர். கலந்தாய்வில் மனுதாரருக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி மற்றும் பல் மருத்துவக்கல்லூரி அரசு கல்லூரிகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டது சட்ட விரோதமானது. ஆனால், மருத்துவக் கல்வி இயக்குனர் இதுவரை முறையான பதில் மனுவையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, மாணவியை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக மருத்துவக் கல்வி இயக்குனருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.