அரசுக்கு பிரேமலதா கோரிக்கை மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

சென்னை: உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தியுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலக மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மருத்துவத்துறையில் முன்மாதிரியான மாநிலமாக திகழும் தமிழ்நாட்டில், அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் அளிக்கப்படுகிறது. தகுதிக்கு ஏற்ற ஊதியம் வேண்டி அரசு மருத்துவர்கள் நீண்ட காலமாகவே போராடி வருகின்றனர். எனவே, மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று, ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற மாபெரும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.

Related posts

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா

யூரோ கோப்பை கால்பந்து; காலிறுதியில் துருக்கி

உலக சாம்பியன்களுக்கு உற்சாக வரவேற்பு: மும்பையில் இன்று வெற்றி ஊர்வலம்