Saturday, June 29, 2024
Home » உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை: கலெக்டர், எம்எல்ஏ அஞ்சலி

உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணுக்கு அரசு மரியாதை: கலெக்டர், எம்எல்ஏ அஞ்சலி

by Ranjith

திருவள்ளூர்: திருத்தணியில் உடல் உறுப்புகள் தானம் செய்த பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் கலெக்டர், எம்எல்ஏ அஞ்சலி செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கார்த்திகேயபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நாகரத்தினம்(60). இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இவர் மூளைச் சாவு அடைந்தார்.

இதனையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் உடல் உறுப்பு தானம் செய்த நாகரத்தினம் உடலுக்கு மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர், திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் வருவாய் கோட்டாட்சியர் தீபா, வட்டாட்சியர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

You may also like

Leave a Comment

19 − seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi