தஞ்சை: தஞ்சையில் தூய்மைப் பணியாளர்களை பேருந்தில் ஏற்றாத அரசு பேருந்து நடத்துனர், நேரக்காப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அரசுப் பேருந்து நடத்துனர் ஏசுதாஸ் மற்றும் நேரக்காப்பாளர் ராஜாவை இடமாற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களை அரசுப் பேருந்தில் ஏற்றவில்லை என்பது புகார் ஆகும்.