சென்னை: அரசு முத்திரை, சின்னங்கள் 1.04 லட்சம் வாகனங்கள் தவறாக பயன்படுத்தி உள்ளன என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய தனியார் வாகன உரிமையாளர்களிடம் ரூ.16.56 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களில் விதிகளை மீறி அரசு முத்திரையை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.