பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்புச் சட்டப்படி, தமிழ்நாட்டில் அரசு முதியோர் இல்லங்கள் செயல்படுகின்றனவா என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தேன். அதற்கு முதியோர் இல்லங்களை அரசு நேரடியாக நடத்தவில்லை என்று பதில் வந்தது. முதியோர் இல்லங்களுக்கு மானியம் மட்டும் வழங்கி வருகிறது. இதன் மூலம், சட்ட விதிகளை அமல்படுத்த அரசு தவறி விட்டது. எனவே, சட்டப்படி மாவட்டந்தோறும் அரசு முதியோர் இல்லங்கள் அமைப்பதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி வி.எஸ்.கங்காபுர்வாலா மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள், ‘எத்தனை மாவட்டங்களில் அரசு முதியோர் இல்லங்கள் இல்லை’ என்று மனுதாரருக்கு கேள்வி எழுப்பியது. அதற்கு, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்று மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஒரு மாவட்டத்தில் கூட அரசு முதியோர் இல்லம் இல்லை என்ற மனுதாரர் தரப்பு வாதம் தவறு எனத் தெரிய வந்தால், மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்த நீதிபதிகள், மனுவுக்கு வரும் 31ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.