மதுரை: அரசுப்பணம் ரூ.12.72 லட்சத்தை முறைகேடாக பயன்படுத்திய புகாரில் சிவகங்கை ஆட்சியர் பதில் தர ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தொடர்ந்த வழக்கில் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து துறை செயலரும் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. திருப்பத்தூர் அருகே பூலாங்குறிச்சியில் அரசு பணத்தை வீணடித்து சாலைகள், கல்மேடை அமைத்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.