புதுச்சேரி: தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன், ‘எக்ஸ்’ வலைதளம் கணக்கு பயன்படுத்தி வருகிறார். அவரை டிவிட்டரில் 6.55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். கடைசியாக பிரதமர் மோடியுடன் பங்கேற்ற பொங்கல் விழா பதிவை தனது டிவிட்டரில் தமிழிசை பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் கவர்னர் தமிழிசையின் ‘எக்ஸ்’ வலைதளம் கணக்கு ஹேக்கர்களால் திடீரென ஹேக் செய்து முடக்கப்பட்டுள்ளது. இதனால் கவர்னர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து ‘எக்ஸ்’ வலைதளம் கணக்கை மீட்கும் முயற்சியில் ஆளுநர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.