ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது

சென்னை: காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்மநபர், ஆளுநர் மாளிகையில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். இதை தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் சோதனையிடப்பட்டது. பின்னர் அது வதந்தி என தெரிந்தது. இதுதொடர்பாக சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பது தெரியவந்தது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார். , தேவராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அவரது உறவினர்களிடமும் விசாரிக்கின்றனர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!