சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தந்தது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இனியாவது ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் முடிவுக்கு வரட்டும் என்று அவர் கூறியுள்ளார். ஆளுநரின் முடிவு மிக தாமதமானது என்றாலும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுக்கும் என்ற வகையில் வரவேற்கத்தக்கது.