சென்னை: ஆளுநருக்கு தமிழ்நாடு வரலாறு பற்றி எதுவும் தெரியவில்லை என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்-ல் இருந்து வந்தவர்களுக்கு சுதந்திர போராட்டத்தின் மதிப்பு தெரியாது என்பதை ஆளுநரின் செயல்பாடு உணர்த்துகிறது. தினமும் பொய் சொல்வதையே தனது தொழிலாக ஆளுநர் கொண்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.