சென்னை: ஆளுநர் ரவியின் கருத்தை யாரும் ஏற்க மாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் எந்த ஆளுநராலும் சொல்லப்படாத அக்கிரமமான வார்த்தையை ஆளுநர் ரவி கூறியுள்ளார். வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக் போராட்டம் நடத்தினார்கள் என ஆளுநர் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என வைகோ தெரிவித்தார்.