சென்னை : குவைத் தீவிபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது வேதனை அளிக்கிறது என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளச் செய்தியில், “குவைத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.