சென்னை: சிறுபான்மையினருக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாக தமிழ்நாடு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. செப்.7-ல் சென்னை நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி சமய சார்பற்ற மக்கள் மீது வெறுப்பை உமிழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. சிறுபான்மை சமூகம் மீது தனக்குள்ள வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் வெளிப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசி இருந்தார்.