நாகர்கோவில்: ஆளுநரும், பாஜகவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் அமைச்சர் மனோதங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஆளுநரும், பாஜகவும் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆளுநர் அவரது எல்லையை புரிந்து கொள்ள வேண்டும். பாஜகவை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை; அது ஆட்கள் இல்லாத கட்சி, கதைக்கு ஆகாத கட்சி. நடைபயணம் என்று சொல்லி அதை கூட ஒழுங்காக நடத்த முடியாத கட்சி அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இவ்வாறு கூறியுள்ளார்.